Книга Sera Thandavam Bharathidasan

Sera Thandavam

Автор: Bharathidasan
Език: Тамилски език
Корици: С меки корици
Издател: Nilan Publishers
Наличност: Външен склад
Изпращаме след 9-15 дни
11.71 22.91 лв
அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான்.சேரதாண்டவம் என்பது சேரன...

Информация за книгата

Автор
Език
Тамилски език
Корици
Книга - С меки корици
Издадена
2026
страници
156
EAN
9788168572911
ISBN
8168572912
Enbook ID
52114635
Издател
Теглоt
219
Размери
152 x 229 x 8

Пълно описание

அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான்.

சேரதாண்டவம் என்பது சேரன் ஆட்டனத்தியின் கூத்து எனப் பொருள்படும். எனவே, சேரனின் கூத்துப் பற்றிய நூல் இது என்க.

கூத்துப் பற்றிய நூல் எனின், கூத்தின் இலக்கணம் கூறும் நூலோ, அன்று. சேரனின் கூத்தே இக்கதைக்கு வேராகவும், மரம் கிளையாக வும் வருதலின் சேரதாண்டவம் கதை விளக்குவதென்க.

ஆட்டனத்தி ஆதிமந்தி பற்றிய வரலாறு, தொடர்பாக யாண்டும் கிடைப்பதின்று. பாண்டியன் உயிர் விட்டபின் பாண்டியன் மனைவிக்குக் கண்ணகி கூறியதாக உள்ள மூன்று கற்புக்கரசியர் வரலாறுகளில், ஆதிமந்தி வரலாறு ஒன்று என்றுமட்டும் காணப்பட்டது கொண்டு, அத்தகைய வரலாறு நூல்களில் நுணுகி ஆராயப்பட்டது.

சேரநாட்டின் அரண்மனையில் அமைந்த ஆடல் அரங்கில், சேரநாட்டுப் படைமறவர்களும், அறிஞர்களும், அமைச்சர் முதலியவர்களும், ஆடல் காணும் அவாவுடன் நிறைய அமர்ந்திருக் கின்றார்கள்.

கூட்டிசை முழங்கி அறுதியடைகிறது.

ஆடல் ஆசிரியனும், ஆட இருப்போனுமாகிய சேரன் ஆட்டனத்தி அரங்கின் நடுவில் தோன்றுகிறான், மணித்தேர் நிலைக்குவந்து நின்றது போல்!

சேரன் ஆட்டனத்தி செப்புகின்றான்;

வாழ்க! சேரநாட்டு மறவர் வாழ்க! பெருமக்கள் வாழ்க!

மேலும் விளம்புகின்றான்;

இன்றைய அரங்கு, என் படைமறவர்க்கு! அவர்கள் போர்த் திறம் பெறுவதற்கு! அவர்களின் உள்ளம் உயர்வு பெறவேண்டும் என்பதற்கு!

என் அரசியல் உறுப்பினரும், அறிஞர்களும் கருத்தோடு காண்க. என் படைமறவர், பார்ப்பதோடன்றிப் பார்த்தவைகளைத் தம் போர்வாழ்வில் மேற்கொண்டு புகழ் பெறுவாராகுக.

Клиенти, които купиха тази книга, купиха също

Capture The Wind For Me

Brandilyn Collins
15.22 29.76 лв

Ángel

Bill VanPatten
10.01 19.58 лв

Walk On By

Sarah Hegger
19.57 38.28 лв
18.82 36.82 лв